முழு நிலா நம்மை
குளிர் ஒளியால் நனைக்கிறது!
உன் விரல் தீண்டும் பொன்வேளை
இனிமைகளை விதைக்கிறது!
கனவுக்குள் ஓர் பயணம் இது...
உன் கண்களுக்குள்
எடுக்கும் புதையல் இது!
தீண்டல்களின் சுகத்தில்
தீண்டல்களின் சுகத்தில்
நமை மறக்கும் மாலையிது...
தொடுவானம் தாண்டி
வெகு தூரம் செல்வோம் வா...
இதயத்தின் சங்கமத்தில்
இதயத்தின் சங்கமத்தில்
இமயத்தை வெல்வோம் வா!
கண்ணுக்குள் எடுக்கும் புதையல்..
ReplyDeleteவரிகள் அருமை 👌❤️
Thank you
ReplyDelete