Thursday, 24 October 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-அத்தியாயம்-3 இயற்கையிலிருந்து எழுந்த உயிர்கள்!


 ஒரு துளியிலிருந்து  பிரபஞ்சம் மட்டும் தோன்றவில்லை.

 ஒரு துகள் மகரந்த சூலில்தானே உலகத்து தாவரங்களின் உற்பத்தி நடக்கிறது!

 ஒரு துளி விந்தின் ஊடுருவல் தானே உயிர்களின் பயணத்தை தொடங்கி வைக்கிறது!

ஆணாய்,பெண்ணாய், ஆணும் பெண்ணுமாய் பிறக்கும் உயிரெல்லாம் ஒரு துகள் அல்லது ஒரு துளியின் படைப்பு.

குட்டியாய் குஞ்சாய் பிறக்கும் உயிர்கள் ஒரு துளி மூலமே உண்டாகின்றன. உட்புறம் வெளிப்புறம் இருவகை கருவுறுதலில் உயிர்களின் ரகசியத்தை இயற்கை வைத்துள்ளது.

மூலம் எதுவென சற்றே யோசித்தால், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் இவற்றின் கலவை தான் இத்தனை உயிர்களும்.

கண்ணுக்குத் தெரியாமல் இருந்த ஒரு துளிதான் எல்லையற்ற பிரபஞ்சமாய் பரிணாமம் கொண்டது.

ஒரு துகள்  மகரந்தம் தாவர இ னங்களைத் தருகின்றது.
ஒரு துளி விந்து புழு,பூச்சி விலங்குடன் மனிதனையும் படைக்கின்றது.

நாம் காணும் உயிர்ப்பொருளும் ஜடப்பொருளும் ஒரு துளியில் உருவானவை.

ஜடப்பொருள்  உயிர்களுக்கு முன்பே வந்தது. உயிரினம் தோன்றிட அடிப்படைப் பொருள்களை ஆய்ந்து தெளிந்து அமைத்தது.

அடிப்படை ஐம்பொருளில்  இருந்து தாவரம் வந்தது. தாவரத்தை உணவாய் உண்டு பிற உயிர்கள் கிளைத்தன.

சில உயிர்களுக்கு தாவரங்கள் உணவு. சில உயிர்களுக்கு பிற உயிர்கள் உணவு.

 மனிதனின் உணவு, தாவரங்கள் பிற உயிர்கள் மட்டுமல்ல, இன்னொரு மனிதனும் தான்.

           ஆம்...
மனிதனுக்கு ஆறாம் அறிவும் இருக்கிறது!





2 comments:

  1. ஒரு துளியில் ஓராயிரம் கோடி படைப்பு..👌👍

    ReplyDelete