தெரிவதில்லை...
நான் இருக்கிறேன் என்று சொல்லும் நட்புகளின்
நிழல் திட்டங்கள்
புரிவதில்லை...
எல்லாமே சரியானவைபோல் தோன்றினாலும்
உறவுகளின் அசல் தன்மை உணரப்படுவதில்லை...
ஆதாயங்களால் சரிந்து போகும் நட்புகளை உறவுகளை
என்ன செய்ய முடியும்...
விழிப்புடன் இருந்தால்
மீண்டும் ஒரு முறை பாதிக்கப்படாமல்
விலகிக் கொள்ளலாம்... அவ்வளவுதான்!
முகமூடிகளின் உலகை
ஒரு சில நாட்களில்
மாற்றிவிட சாத்தியமில்லை...
பாதுகாப்பாய் இருக்க... தூரங்களை அதிகப்படுத்தலாம்...
பற்றுகளே
இல்லாமல் இருந்தால் துயரங்களை
தவிர்த்துக் கொள்ளலாம்!
No comments:
Post a Comment