அனிதாவின் கண்கள் பழைய புகைப்படத்தில் உருகின. புகைப்படத்தில் கார்த்திக்கின் சிரித்த முகம் அவளுக்கு ஒரு கனவுலகத்தை நினைவுபடுத்தியது.
அவள் இதயம் வேகமாக துடித்தது. தன் உணர்வுகளை கார்த்திக்கிடம் சொல்ல வேண்டும் என்ற ஆசை அவள் மனதில் கொதித்துக் கொண்டிருந்தது. ஆனால், தயக்கம், பயம் என்று பல எண்ணங்கள் அவளை கட்டுப்படுத்தின.
ஒரு நாள், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கார்த்திக்கிடம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினாள். கார்த்திக்கும் அனிதாவைப் பிடித்திருப்பதாகச் சொன்னான்.
ஆனால், சமூக வேறுபாடு, குடும்பத்தின் எதிர்ப்பு போன்ற பிரச்சினைகள் இருப்பதாகவும் சொன்னான். அனிதா கார்த்திக் மீது கொண்ட காதல் எல்லா தடைகளையும் தாண்டி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்தாள்.
இருவரும் சேர்ந்து அனிதாவின் தந்தையை சந்தித்து தங்கள் உறவைப் பற்றி சொன்னார்கள்.
அனிதாவின் தந்தை முதலில் கோபப்பட்டாலும், பின்னர் அவர்களின் உண்மையான காதலை உணர்ந்து ஒப்புக்கொள்வார் என்று தான் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் அப்படி நடக்கவில்லை.
ஒரு வாரத்துக்குப்பின், அவர் கார்த்திக்கிடம் கூறினார், “இது ஒத்து வராது. " என்று சாதி பிரச்சனையை காரணம் காட்டினார் .
அனிதா ,கார்த்திக்கிடம், “நம்ம இருவரும் சேர்ந்து வாழ முடியாது. அப்பாவின் வார்த்தையை நான் மீற முடியாது ” என்றாள்.
கார்த்திக்கின் முகம் வெளுத்துப் போனது. அவளின் எதிர்பாராத இந்த முடிவு அவனை நொறுக்கியது.
கார்த்திக் அனிதாவின் வீட்டை விட்டு வெளியே வந்தான். அவன் மனதில் ஏற்பட்ட வலி சொல்ல முடியாதது. அவன் மனதில் ஒரு கேள்வி எழுந்தது, “அனிதா என்னை உண்மையாகவே விரும்பினாளா?” என்று!
அவர்களின் பிரிவுக்கு சாதி ஒரு காரணமில்லை அனிதாவின் தந்தை ஒரு வசதியான மாப்பிள்ளையை பார்த்திருப்பதும் அவனை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று அனிதாவை மிரட்டியதும் அவனுக்குத் தெரியாது.
அனிதா தனது முடிவை எடுத்த பிறகு, அவளது மனதில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டது.
அனிதா தன் தந்தை முடிவு செய்தவனையே திருமணம் செய்து கொண்டாள். ஆனால், அவள் மனதில் கார்த்திக்கின் நினைவு எப்போதும் இருந்தது.
அவள் கண்களில் எப்போதும் தீராத ஒரு சோகத்தின் நிழல் இருந்தது!
எல்லா பெற்றோருக்கும் சொல்வது இதுதான்.
ReplyDeleteபிடிவாதம் வேண்டும் .
புரிய வைக்க வேண்டும்.
மாறாத குணமும் மாறும்.
இதுவே வெற்றிக்கு வழி.
This comment has been removed by the author.
ReplyDeleteஎல்லாருக்கும் அந்த போராடும் குணம் வந்துவிடாது. எதிர்ப்புகளை சமாளிக்கும் தைரியம் இல்லாதவர்கள் இப்படி முடிவு எடுப்பார்கள்.
ReplyDeleteகாதலில் போராடும் குணம் வேண்டும்.இருமனம் கலந்த பின் வேறு ஒரு வாழ்க்கை என்பது துக்கமான ஒன்று.
ReplyDelete