Friday, 8 November 2024

மந்திரப் புன்னகை ! - மதிபாலன்

உன் கண்கள்...
இரு பெருங்கடல்கள்!
ஆழத்தில் என்னை மூழ்கடிக்கின்றது.

உன் புன்னகை..
ஒரு மழைத்துளி!
என் உள்ளத்தை குளிர்விக்கின்றது.

உன் குரல் 
ஒரு இசைக்கருவி,
என் செவிகளை
 மயக்கி விடுகிறது!

உன் வசீகர அழகின் வெளிச்சம் 
என் இதயத்தை 
மின்னல் போல் தாக்குகிறது!

நீ இல்லாத நேரங்கள்,
ஒரு கனவு போலவே தோன்றுகிறது!

உன்னை நினைக்கும் போதெல்லாம் 
என்னை அறியாமல் 
ஒரு புன்னகை  வருகிறது!

நீ 
பனியில் நனைந்த மல்லிகையா?
என்னை 
பைத்தியம் ஆக்கும் தேவதையா? ❤️

2 comments:

  1. உணர்வுகள் ,உவமைகள்..
    நிறைந்த உற்சாக கவிதை 👏👌💐

    ReplyDelete
  2. நன்றிகள் பல!

    ReplyDelete