நெகிழ்வுத்தன்மையை வளர்ப்பது
உணர்ச்சி நெகிழ்வுத்தன்மை
முதலில் நாம் நமது உணர்ச்சி நெகிழ்வுத்தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
வரையறை: உணர்ச்சி நெகிழ்வுத்தன்மை என்பது மன அழுத்தமான சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்ளும் திறன் ஆகும்.
ஒரு தோல்வி வந்தால் அதைக் கண்டு துவண்டு போய் மூலையில் முடங்கி விடாமல், மீண்டும் எழுந்து செயல்பட வேண்டும்.
இதுவே நம் நல்வாழ்வை பேணுவதற்கும் தடைகளிலிருந்து மீண்டு வருவதற்கும் வழியாகும்.
முக்கியத்துவம்: உணர்ச்சி நெகிழ்வுத்தன்மையை வளர்த்துக்கொள்வது சவால்களைச் சமாளிக்க உதவுகிறது, மன அழுத்தத்தின் தாக்கத்தை குறைக்கிறது மற்றும் உங்கள் ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
உணர்ச்சி நெகிழ்வுத்தன்மையை வளர்ப்பது
நேர்மறையான தன்னுரையாடல்
வழிமுறை: எதிர்மறையான எண்ணங்களை நேர்மறையான உறுதிமொழிகளால் மாற்றுங்கள் . சவாலான காலங்களில் உங்களை நீங்களே ஊக்குவித்துக் கொள்ளுங்கள்
பயிற்சி: "நான் திறமையானவன்," "நான் இதைச் சமாளிக்க முடியும்," அல்லது "நான் வலிமையானவன்" போன்ற உறுதிமொழிகளின் பட்டியலை உருவாக்கவும்.
உன்னால் முடியாவிட்டால் யாரால் முடியும்? இப்போது முடியாவிட்டால் எப்போது முடியும்? - என்பது புகழ்பெற்ற ஜப்பானிய வாசகம்.
பயம் தோன்றும்போது குறிப்பாக இவற்றை தினமும் உங்களுக்கு நீங்களே மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
நன்றியுணர்வு பயிற்சி
வழிமுறை: நீங்கள் நன்றியுள்ள விஷயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்துவது உங்கள் மனநிலையை எதிர்மறையிலிருந்து நேர்மறைக்கு மாற்றும்.
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு "- என்பது திருக்குறள்.
பயிற்சி: நீங்கள் எதற்கெல்லாம் யாருக்கெல்லாம் நன்றியோடு இருக்கிறீர்கள் என்பதை எழுதி வையுங்கள்.
ஒவ்வொரு நாளும் நீங்கள் நன்றியுள்ள மூன்று விஷயங்களை எழுதுங்கள். இந்தப் பயிற்சி உங்கள் வாழ்க்கையின் நேர்மறையான அம்சங்களை எடுத்துக்காட்டுவதன் மூலம் பயம் மற்றும் கவலையை எதிர்த்துப் போராட உதவும்.
உணர்ச்சி ஒழுங்கமைப்பு
வழிமுறை: உங்கள் உணர்ச்சிகளை ஆரோக்கியமான முறையில் நிர்வகிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
பயிற்சி: பயத்தால் நிறைந்திருக்கும் போது, நிறுத்தி சில முறை ஆழமாக சுவாசியுங்கள்.
நீங்கள் உணரும் உணர்ச்சியை அடையாளம் கண்டு, அதைத் தூண்டியது எது என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.
எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக எவ்வாறு நம் மன அமைப்பை பலப்படுத்தலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.
இணைப்பு: உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் இவை இரண்டும் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியமான மனம் ஆரோக்கியமான உடலைக் கட்டமைக்கிறது.
ஆரோக்கியமான உடல் இருந்தால் மன அழுத்தம் மற்றும் பயத்தை சிறப்பாக சமாளிக்க முடியும்.
பலன்கள்: வழக்கமான உடற்பயிற்சி, சீரான உணவு மற்றும் போதுமான தூக்கம் பயம் மற்றும் மன அழுத்தத்தை கையாளும் உங்கள் திறனை மேம்படுத்துகின்றன.
உடல் நெகிழ்வுத்தன்மையை வளர்ப்பது
1.தொடர்ச்சியான உடற்பயிற்சி
வழிமுறை: உடற்பயிற்சி செய்வது எண்டோர்பின் என்னும் ஹார்மோனை வெளியிடுகிறது, இது மனநிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கிறது.
பயிற்சி: உங்கள் தினசரி வழக்கத்தில் நடப்பது, ஓடுவது, யோகா அல்லது பளு தூக்குவது போன்ற செயல்பாடுகளை இணைக்கவும்.
வாரத்தில் பெரும்பாலான நாட்களில் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்யுங்கள்.
ஆரோக்கியமான உணவு
வழிமுறை: உங்கள் உடலை சீரான,சரிவிகித உணவோடு வளர்ப்பது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பயிற்சி: பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்ளுவதில் கவனம் செலுத்துங்கள்.
அதிகப்படியான காபி, தேநீர் மற்றும் சர்க்கரையைத் தவிர்க்கவும். இவை செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துவதோடு உடல் எடையையும் அதிகரிக்கும்.
போதுமான தூக்கம்
வழிமுறை: உங்கள் உடலும் மனதும் ஓய்வெடுத்து மீளுவதற்கு தூக்கத்துக்கு முன்னுரிமை கொடுங்கள்.
தூக்கத்தின்போதுதான் இழந்த சக்தி மீட்கப்பட்டு வலிகள் குறைகின்றன.
உடலின் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பராமரிப்பு நடைபெற்று காயங்கள் ஆறுகின்றன மற்றும் நோய்கள் குணமாகின்றன.
பயிற்சி: ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழுந்திருப்பதன் மூலம் வழக்கமான தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
புத்தகம் படிப்பது அல்லது மனம் மற்றும் உடலை தளர்வாக வைத்திருக்கும் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
முன்னேற்ற மனப்பாங்கை வளர்ப்பது
வளர்ச்சி மனப்போக்கு
நிலையான மனப்போக்கு: நமது திறமைகள் மற்றும் புத்திசாலித்தனம் இவை நிலையானவை மற்றும் மாறாதவை என்று உணருங்கள்.
வளர்ச்சி மனப்போக்கு: விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் உங்கள் திறன்கள் மற்றும் புத்திசாலித்தனத்தை வளர்க்க முடியும் என்று நம்புங்கள்.
வளர்ச்சி மனப்போக்கை ஊக்குவித்தல்
சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள்
வழிமுறை: சவால்களை அச்சுறுத்தல் என்று நினைக்காமல் வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகக் கருதுங்கள்.
பயிற்சி: சவால்களை எதிர்கொள்ளும்போது, அவை நாம் புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு, நம்மை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வாழ நினைத்தால் வாழலாம்! வழியா இல்லை பூமியில்? - என்னும் திரைப்படப் பாடலை கேட்டிருக்கிறீர்கள் அல்லவா!
நீங்கள் சிரமங்களை சமாளித்து வலுவாக வளர்ந்த கடந்த கால அனுபவங்களைப் பற்றி சிந்தியுங்கள். இதனால் மனதில் நம்பிக்கை ஏற்படும்.
விமர்சனத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
வழிமுறை: விமர்சனங்கள் எல்லாம் உங்களை தகர்க்க வந்தவை அல்ல என்பதை உணருங்கள்.
உங்கள் திறன்களையும் அறிவையும் மேம்படுத்தி மேலும் பலம் உள்ளவராக மாற்ற வந்தவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்
பயிற்சி: நம்மை ஒருவர் விமர்சித்தால், அதை தனிப்பட்ட முறையில் அவமானமாக எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய நுண்ணறிவுகளில் கவனம் செலுத்துங்கள்.
நீங்கள் வளரும்போது விமர்சனங்கள் தானே உதிர்ந்து விடும்.
மேலே சொன்ன வழிமுறைகளையும் பயிற்சி முறைகளையும் பின்பற்றி பயங்களை அகற்றுங்கள். வெற்றியை நோக்கி வீர நடை போடுங்கள்!
No comments:
Post a Comment