Thursday, 12 December 2024

காதல் மேகம்- மதிபாலன்

 

பகலும் இரவும் அணைத்துக் கொள்ளும் இனிய மாலை. பசுமை கொஞ்சும் மரங்கள் சூழ்ந்த அழகுச் சோலை.

இரு இதயங்கள் இணைந்த  அஸ்வினும் அனுஷாவும் அருகருகே அமர்ந்திருந்தனர். கண்கள் கண்களைத் தேடி , மனங்கள் ஒன்றோடொன்று பேசிக்கொண்டிருந்தன.

மெல்ல மெல்ல, வானம் கறுத்து  மேகங்கள் பன்னீரை  தூவத் தொடங்கின. மழைத்துளிகள்,  அவர்கள் இருவரின் மீதும் வசீகரப் பூக்களாய் வந்து விழுந்தன.

 ஒவ்வொரு மழைத்துளியும்   , அவர்களின் காதலை வளர்த்தது. அனுஷாவின் விழிகள், மழைத்துளிகளில் மின்னின. அஸ்வினின்  இதயம், அந்த வசீகர ஒளியில் கரைந்தது.

"இந்த மழைத்துளிகள், நம் காதலைப் போலவே" என்றாள் அனுஷா. 

"எப்படி?" என்றான் அஸ்வின். 

" மண்ணோடு சேரும் இந்த மழைத்துளிகளைப் பிரிக்க முடியாது. அதுபோல  நம் காதலையும் யாரும் பிரிக்க முடியாது" என்றாள் அனுஷா.

 அஸ்வின், அனுஷாவை மெல்ல அணைத்துக் கொண்டான். மழைத்துளிகள், அவர்களின் இணைப்பை பலப்படுத்தின.

அந்த நொடி, அவர்கள் இருவரின் இதயத்துடிப்பும்  ஒன்றாக இணைந்தது.  மழையின் இசை, அவர்களின் காதலின் பாடலாக ஒலிக்கத் தொடங்கியது!

 .

No comments:

Post a Comment