காலம் 3123. அர்ஜுன் தனது விண்கலத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்தான்.
அந்த கிரகம், பூமியைப் போலவே இருந்தது. ஆனால், அங்கு வாழ்க்கை இல்லை.
அந்த கிரகத்தில் இறங்கிய அர்ஜுன், தனது திறனைப் பயன்படுத்தி அந்த கிரகத்தின் நேரத்தை மாற்றினான். மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இருந்த காலத்திற்கு அந்த கிரகத்தை கொண்டு சென்றான்.
அப்போது, அந்த கிரகம் உயிரினங்கள் நிறைந்த ஒரு கிரகமாக இருந்தது.
அர்ஜுன் அந்த கிரகத்தில் நடந்ததை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று அவன் கண்களுக்குத் தென்பட்டது ஒரு வித்தியாசமான உயிரினம்.
அது ஒரு மனிதனைப் போலவே இருந்தது, ஆனால் அதன் தோல் நீல நிறமாகவும், கண்கள் பெரிதாகவும் இருந்தது.
அந்த ஏலியன் அர்ஜுனைப் பார்த்து ஆச்சரியத்துடன் கூவிற்று, "நீங்கள் யார்? எங்கிருந்து வந்தீர்கள்?"
அர்ஜுன் அமைதியாக, "நான் பூமியிலிருந்து வந்தவன். என் பெயர் அர்ஜுன். உன் பெயர்?" என்று கேட்டு நிறுத்தினான். அது தன்னை ஸ்பார்க்கி என்று அறிமுகப்படுத்திக் கொண்டது.
பிறகு ஸ்பார்க்கி அர்ஜுனை பார்த்து,"பூமி? அது எங்கே இருக்கிறது?" என்றது.
அர்ஜுன், "அது வேறு ஒரு கிரகம். நான் நேரத்தை மாற்றும் திறன் கொண்டவன். அதனால்தான் உங்க கிரகத்துக்கு வந்தேன்." என்றான்.
ஸ்பார்க்கி, "நேரத்தை மாற்றும் திறன்? அது எப்படி சாத்தியம்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது.
அர்ஜுன், தனது திறனைப் பற்றி ஸ்பார்க்கியிடம் விளக்கினான். ஸ்பார்க்கி அர்ஜுனின் கதையை கேட்டு வியப்படைந்தது.
அவர்கள் இருவரும் பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
தங்களது கிரகங்கள், கலாச்சாரங்கள் பற்றி பகிர்ந்து கொண்டனர்.
ஸ்பார்க்கி, அர்ஜுனுக்கு தனது கிரகத்தை சுற்றிப் பார்க்க அழைத்தது. அர்ஜுன், அதனுடன் சேர்ந்து அதன் கிரகத்தை சுற்றிப் பார்த்தான்.
அந்த கிரகத்தில் பல அதிசயமான விஷயங்களை அர்ஜுன் பார்த்தான். பறக்கும் மீன்கள், ஒளிரும் மரங்கள், பேசும் விலங்குகள் என்று பல வித்தியாசமான உயிரினங்கள் இருந்தன.
இப்படி பல நாட்கள் கழிந்தன.
அர்ஜுன், அந்த கிரகத்தில் கழித்த நாட்கள் தனது வாழ்நாளில் மறக்க முடியாத நாட்களாக இருந்தது.
அவர்கள் இருவர் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில், திடீரென்று வானில் ஒரு பெரிய ஒளிக்கீற்று தென்பட்டது.
அது வேறொரு விண்கலம். அதிலிருந்து ஒரு பெரிய உருவம் இறங்கியது. அது ஒரு பெரிய, கருப்பு நிற உயிரினம். அதன் கண்கள் சிவப்பாக ஒளிர்ந்தன . அது தனது கையில் ஒரு பயங்கர ஆயுதத்தை பிடித்திருந்தது.
அதைப் பார்த்த ஸ்பார்க்கி கலவரம் அடைந்தது. "அது கோஸ்டிக் அல்லவா?" என்று முணுமுணுத்தது.
"அதை உனக்கு ஏற்கனவே தெரியுமா?"என்றான் அர்ஜுன்.
"என் தந்தை இதைப்பற்றி கூறி இருக்கிறார். இது கோஸ்டாரிகா கிரகத்தைச் சார்ந்தது ".
ஸ்பார்க்கி இதை சொல்லி முடிப்பதற்குள் அவர்களை கோபமாக நெருங்கிய கோஸ்டிக், "இந்த கிரகம் என்னுடையது! நீங்கள் இங்கிருந்து வெளியேறுங்கள்!" என்று கத்தியது.
அர்ஜுனும், ஸ்பார்க்கியும் பயந்து போயினர்.
கோஸ்டிக் ஆக்ரோஷமாக அவர்களைத் தாக்க வந்தது. அர்ஜுன் தனது திறனைப் பயன்படுத்தி, அதை வேறு ஒரு காலத்திற்கு அனுப்பி வைத்தான். ஆனால், அது திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருந்தது.
அப்போது, ஸ்பார்க்கி ஒரு யோசனை சொன்னது. "நாம் ஒன்று சேர்ந்து அதை எதிர்த்தால், அதை வெல்ல முடியும்." என்றது.
அர்ஜுன், ஸ்பார்க்கியின் யோசனையை ஏற்றுக் கொண்டான்.
இருவரும் ஒன்று சேர்ந்து கோஸ்டிக்கை எதிர்த்தனர். அர்ஜுன் தனது திறனைப் பயன்படுத்தி, அதை குழப்பினான்.
ஸ்பார்க்கி தனது இடி உருவாக்கும் ஆயுதத்தைப் பயன்படுத்தி, கோஸ்ட்டிக்கை தாக்கியது.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அவர்கள் அதை வெல்ல முடிந்தது. அது தாக்குப் பிடிக்க முடியாமல் தனது விண்கலத்தில் ஏறி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
அர்ஜுனும், ஸ்பார்க்கியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சிரித்தனர். அவர்கள் இருவரும் இணைந்து ஒரு பெரிய ஆபத்தைத் தவிர்த்திருந்தனர்.
காலம் தாண்டி, கிரகம் தாண்டி அவர்களின் நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது!