Showing posts with label #தொடர்கதை #மர்மம். Show all posts
Showing posts with label #தொடர்கதை #மர்மம். Show all posts

Tuesday, 10 December 2024

மதுரை நூலக மர்மம்!(அத்தியாயம்-1)- மதிபாலன்

துரை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நூலகத்தில், ஒவ்வொரு புத்தகமும் ஒரு கதை சொல்லும். ஆனால் இன்று, அந்த அமைதி சீர்குலைந்து கிடந்தது. 

புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ராகவன், தனது அலுவலகத்தில் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தார். அவரது மேசை, நூற்றாண்டுகளைத் தாண்டிய புத்தகங்களால் நிரம்பியிருந்தது. 

அந்தக் குழப்பத்தில், ஒரு பழைய கையெழுத்துப் பிரதியின் கிழிந்த பக்கம் மட்டும் தனித்து நின்றது.

 சூரிய ஒளி, நூலகத்தின் பழங்கால ஜன்னல்களின் வழியாக ஊடுருவி, தரையில் ரத்தக்கறைகளை பிரகாசிக்க வைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்யா, தன் மிடுக்கான யூனிஃபார்மில்   நூலகத்திற்குள் நுழைந்தார். 

அவரது கண்கள், ஒவ்வொரு மூலையையும் ஆராய்ந்தன. ராகவனின் அலுவலகம், ஒரு குற்றத்தின் களமாக மாறியிருந்தது.

"ராகவன்... ஒரு அமைதியான ஆய்வாளர். இவர் மீது யாருக்கு பகை?" ஆர்யா தனக்குத்தானே முணுமுணுத்தார்.

 தடயவியல் நிபுணர்  ரமேஷ் ரத்தக் கறைகளை ஆய்வு செய்து, " சார், ராகவன் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டிருக்கிறார். கொலை நடந்த நேரம் இரவு 12 மணிக்கு மேல் என்று நினைக்கிறேன்," என்றார்.

ஆர்யாவின் கண்கள், கிழிந்த கையெழுத்துப் பிரதியை நோக்கின. "இந்த பிரதி ரொம்ப முக்கியமானது போலிருக்கிறது," என்றார் அவர்.

 ஆர்யா, நூலகர் ராமச்சந்திரனிடம் விசாரிக்கத் தொடங்கினார். ராமச்சந்திரன்,   புத்தக அலமாரிக்குள்   மும்முரமாக  இருந்தார்.மிகவும் அமைதியானவராக காணப்பட்டார்.

"ராகவன் சார் ரொம்ப     மர்மமான மனிதர்  சார். அவர் எப்போதும் பழைய புத்தகங்களில் மூழ்கியிருப்பார். எப்போது வருவார் எப்போது போவார் என்பதை கூட சொல்ல முடியாது. சில சமயங்களில் இரவு முழுவதும் வேலை செய்வார்," என்றார் பதட்டமாக.

"அவர் யாரையாவது சந்தித்தாரா?" ஆர்யா கேட்டார்.

"சில சமயங்களில் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் வருவார்கள். அவர்களுடன் ரகசியமாக பேசுவார்," என்றார் ராமச்சந்திரன்.

"அந்த ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் தெரியுமா?" ஆர்யா மீண்டும் கேட்டார்.

ராமச்சந்திரன் தலையை இடம் வலமாக  ஆட்டினார். "எனக்கு தெரியாது சார். ராகவன் சார் அதை ரகசியமாக வைத்திருப்பார்."

 ர்யா, தனது அலுவலகத்திற்கு திரும்பி வந்து, கிழிந்த பக்கத்தை ஆழ்ந்து ஆராய்ந்தார். 

அந்த நேரத்தில், அவரது கதவு சத்தமில்லாமல் திறந்தது. ஒரு மர்ம ஆசாமி , முகத்தை மறைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தான் .

"அந்த பிரதியை எனக்கு கொடுத்து விடுங்கள்," என்று  தன்  குரலை மாற்றி கேட்டான்.

ஆர்யா திடுக்கிட்டார். "நீங்கள் யார்?" என்று கேட்டார்.

"அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். பிரதியை கொடுத்து விடுங்கள்," என்று மர்ம ஆசாமி மீண்டும் குரலை உயர்த்தினான்..

ஆர்யா, திடீரென்று எழுந்து நின்று, அவனை நோக்கி ஓடினார். இருவரும் சண்டையிடத் தொடங்கினர்.

 அந்த சண்டையின்போது, மர்ம ஆசாமி  ஆர்யாவை தள்ளிவிட்டு, இருட்டில் மறைந்துவிட்டான்.

"இந்த வழக்கு நிச்சயம் எளிதானதல்ல," என்று ஆர்யா தனக்குத்தானே முணுமுணுத்தார்.

 [கிழிந்த பக்கத்தில் என்ன ரகசியம்? ராகவனின் கொலையாளியை பிடிக்க முடியுமா? இந்த கேள்விகளுக்கு பதில்கள், அடுத்த அத்தியாயத்தில்...]