ரோஜாக்கள் அழகா...
உன்
வெட்கம் அழகா?
குயிலோசை இனிதா...
உன்
கொஞ்சல் இனிதா?
பனிச்சாரல் குளிரா...
உன்
பார்வை குளிரா?
மின்னல்கள் எல்லாம்
உன்
புன்னகை ஒளியா?
பூந்தோட்டம் நடுவில்
நீ போவது சரியா...
பூக்கள் எல்லாம் மயங்கி
வீழ்வது சரியா?
சங்கீதம் போலே நீ
சிரிக்கின்றாயே...
ஒரு
சந்தோஷத் தீயாய் எனை
எரிக்கின்றாயே!
உள்ளுக்குள் இன்பம் வளர்க்கின்றாயே...
என்
உற்சாகத் தென்றல்
நீயே நீயே!
கனவுக்குள் வந்து அணைக்கின்றாயே...
எனை
கைதியாய் மாற்றும்
திருடி நீயே!
கேளாத வரமாய்
வந்தாய் நீயே...
காதல்-
கேள்விக்கு பதிலை
தந்தாய் நீயே!
முன்னூறு ஜென்ம
சொந்தம் நீயே...
என்றும்
முடியாத பந்தம்
நீயே நீயே!