Showing posts with label #பாடல். Show all posts
Showing posts with label #பாடல். Show all posts

Friday, 16 May 2025

கண்ணோடு கண்

கண்ணோடு கண் பேச தீயாச்சு மனசு...
கைத்தீண்ட உண்டாகும் மின்சாரம் புதுசு...

 தந்து வைத்த முத்தங்களின் கணக்கு....
சொந்தமாக வந்த பின்பு எதற்கு எதற்கு?

கண்ணோடு கண் பேச தீ ஆச்சு மனசு...
கைதீண்ட உண்டாகும் மின்சாரம் புதுசு...

மின்மினியா... மென்மழையா...
உன் பார்வை காதல் உறைபனியா....
புன்னகையா.... மல்லிகையா....
சந்தேகம் தீர்க்க கொஞ்சம்
கிட்ட வரியா...

கண்ணோடு கண் பேச தீ ஆச்சு மனசு...
கைதீண்ட உண்டாகும் மின்சாரம் புதுசு....

அழகே அழகே - மதிபாலன்

அழகே அழகே நீ யாரு 
நிலவின் முதல் மகளா...
ஆயிரம் டிகிரி குளிர் காய்ச்சல்
விழியால் தருபவளா...

 நீ ஒரு புன்னகை செய்தாலே
 நெஞ்சில் பூகம்பம்....
 நீ என் அருகில் வரும்போது...
 நிகழும் பேரின்பம்....

 உன்னால் தானே என் வருகை...
 நூறு சதவீதம் ஆனதடி!
நீ இல்லாத நாளெல்லாம் 
முழுதும் வீணாய் போனதடி....

அழகே அழகே நீ யாரு 
நிலவின் முதல் மகளா...
ஆயிரம் டிகிரி குளிர் காய்ச்சல்
விழியால் தருபவளா...

காரணம் எதுவும் இல்லாமல்
உன் எதிரில் வருகின்றேன்...
நீ கடந்து போகும் ஒரு நொடியில் கவிதை பெறுகின்றேன்...

பல நாள் முன்பே பார்த்ததுபோல் பரவச உணர்வு தோணுதடி...
நீ என்னோடு இருந்தாலே...
நீளம் உயரம் ஆகுமடி...

அழகே அழகே நீ யாரு 
நிலவின் முதல் மகளா...
ஆயிரம் டிகிரி குளிர் காய்ச்சல்
விழியால் தருபவளா...