Friday, 14 March 2025

வாழைப்பழமும் புத்தக அலமாரியும் - மதிபாலன்

சீதாவுக்கு அன்னிக்கு காலையில ரொம்ப கஷ்டமான நாளா போச்சு. அவ ஒரு சின்ன புத்தகக் கடை வச்சிருக்கா, பேரு "திருப்புதல் பக்கங்கள்".
 டெய்லியும் ஏதாவது கலாட்டா இருக்கும். அன்னிக்கு என்னன்னா, வாழைப்பழம் லேட்டா வரும்னு சொல்லிட்டாங்க. எதுக்கு புத்தகக் கடையில வாழைப்பழம் விக்கிறாங்கன்னு கேக்குறீங்களா? சீதா ஒரு தடவை ஒரு புத்தகத்தில்  படிச்சா, கடைல பழ வாசம் இருந்தா நிறைய புத்தகம் வாங்குவாங்களாம். உண்மையா பொய்யான்னு தெரியல, ஆனா ஒரு புத்தகம் அதிகமா வித்தாலும் லாபம்தானே!

அவ வாழைப்பழக்காரன் ரமேஷ் போன் பண்ணி, வாழைப்பழம் மதியம் வரை வராதுன்னு சொல்லிட்டான். சீதாவுக்கு பயங்கர டென்ஷன் ஆயிடுச்சு. டென்ஷன்ல புழுங்கிக்கிட்டே அங்க இங்கன்னு நடந்து, ஒரு பக்கமா அடுக்கி வச்சிருந்த க்ரைம்  திரில்லர் புத்தகத்துல கால் தடுக்கி, காதல் நாவல் மேல விழுந்துட்டா.  

அப்போதான் அர்ஜுன் வந்தான். அவன் உயரமா ஒல்லியா இருந்தான். கையில ஒரு பெரிய பெட்டி. "வாழைப்பழம்!" ன்னு ரொம்ப சந்தோஷமா சொன்னான்.

"வாழைப்பழமா?" சீதா தரையில இருந்து அவனை பார்த்தா. "நீங்க ரமேஷ் இல்லையே!"

"இல்ல,"ன்னு அவன் பெட்டிய கீழ வச்சான். "ரமேஷோட அண்ணன் பையன். அவன் டிராஃபிக்ல மாட்டிக்கிட்டான், அதான் நான் வந்தேன்." அவன் அங்க சி தறிக்கிடந்த புத்தகத்தையும், விழுந்து கிடந்த சீதாவையும் பார்த்தான். "நீங்க நல்லா இருக்கீங்களா? புக்ஸோட    சண்டை போட்ட மாதிரி இருக்கீங்க."

சீதா முனங்கிக்கிட்டே     புத்தக குவியல்ல  இருந்து எந்திரிக்க முயற்சி பண்ணா. "நான் வாழைப்பழத்த பத்தி ரொம்ப யோசிச்சுக்கிட்டு இருந்தேன். சரி விடுங்க, ரமேஷோட அண்ணன் பையனே, உங்கள பாத்ததில் சந்தோஷம்."

"அர்ஜுன்," ன்னு அவன் கை கொடுத்து அவள எந்திரிக்க வச்சான். அவன் சிரிப்பு கொஞ்சம் கோணலா இருந்தாலும், ரொம்ப அழகா இருந்தது. "புத்தகக் கடையில வாழைப்பழம் விக்கிறீங்களா?"

சீதா தூசி தட்டிக்கிட்டே சொன்னா, "நான் ஒரு ட்ரெண்ட் செட்டர். என்ன சொல்றது? வாழைப்பழமும் புஸ்தகமும் - சூப்பர் காம்பினேஷன். ஜட்ஜ் பண்ணாதீங்க."

அவன் சிரிச்சான். "நான் ஜட்ஜ் பண்ணல. ஆனா, உங்க சட்டையில வாழைப்பழம் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கு." அவன் அத எடுத்துட்டான். சீதாவுக்கு முகம் சிவந்து போச்சு.

அடுத்த சில வாரங்கள்ல, அர்ஜுன் அடிக்கடி கடைக்கு வர ஆரம்பிச்சான். ரமேஷ் வர முடியாதப்போ வாழைப்பழம் கொண்டு வருவான், மத்த நேரம் புஸ்தகம் பாக்க வந்தான்னு சொல்லுவான். அவனுக்கு ரொம்ப கஷ்டமான கவிதைகள் எல்லாம் தெரியும். அதை எல்லாம் சீதா முன்னாடி ரொம்ப நாடகம் போல படிச்சு காட்டுவான். சீதா சிரிச்சு சிரிச்சு அலமாரி மேல சாய்ஞ்சுடுவா.

ஒரு நாள், அவன் தரையில உட்கார்ந்து ஹைக்கூ புஸ்தகம் படிச்சுக்கிட்டு இருந்தான். சீதா கேட்டா, "நீங்க புத்தகம் படிக்க வர்றீங்களா , இல்ல வாழைப்பழத்துக்கா?"

"ரெண்டுக்கும் இல்ல,"ன்னு அவன் சிரிச்சான். "நான் உங்க கம்பெனிக்காக வர்றேன். நீங்க இன்னும் அதிகமா புஸ்தகத்துல தடுக்கி விழாம இருக்கறதுக்கும் வர்றேன்."

அவ கண்ண சுழட்டுனா, ஆனா சிரிப்பு வந்துச்சு. "ஜோக் அடிக்காதீங்க அர்ஜுன். இது கிட்டத்தட்ட காதல்ல சொல்ற மாதிரி இருக்கு."

"அது காதலா இருந்தா என்ன?"ன்னு அவன் கிட்ட வந்தான்.

அப்பத்தான் சீதாவுக்கு புரிஞ்சது, அவளோட குழப்பமான சின்ன புத்தகக் கடை, அந்த வாழைப்பழ பிசினஸ், அங்க அடுக்கி வச்சிருந்த திரில்லர் புஸ்தகங்கள் எல்லாமே ஒரு நல்ல வாழ்க்கைய தரப்போகுதுன்னு.

No comments:

Post a Comment